ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26- ஆம் தேதி, இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடியாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினமாக (Constitution day) கொண்டாடப்படுகிறது.
நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம் ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்படுகின்றன. மக்களாட்சி சிறப்பாக நடைபெறவும், அதன் மாண்பு காப்பாற்றப்படவும் இந்நான்கு தூண்களும் வலுவாக இருப்பது அவசியம்.
ஜனநாயக தூண்களை எப்போதும் வலிமையுள்ளதாக வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது தான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம். 1949 நவம்பர் 26 -ஆம் தேதி, இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் பரிந்துரையை ஏற்று, நமது அரசியலமைப்புச் சட்டம் இறுதி செய்யப்பட்டது
அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26- ஆம் தேதி, அரசியலமைப்புச் சட்டத்தின் தினமாக (Constitution Day) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, அரசியலமைப்புச் சட்ட தினம், நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியலைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது குறித்த பல சுவாரஸ்மான தகவல்கள், மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் ஃபேஸ்புக் பக்க பதிவிலிருந்து இங்கு தொகுத்து அளிக்கப்படுகிறது.
மண்டல் இடத்தில் அம்பேத்கர் : இந்திய அரசியமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள், 1946 டிசம்பர் 9 - ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனை வடிவமைக்க ஏற்படுத்தப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் மொத்தம் 296 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். முதலில் இக்குழுவில் டாக்ட அம்பேக்தர் இடம்பெறவில்லை. கிழக்கு வங்கத்தைச் சேர்ந்த யோகேந்தரநாத் மண்டல் என்பவர் நிர்ணய சபையிலிருந்து வெளியேறியதால், அவருடைய இடத்தில் அம்பேத்கர் இடம் பெற்றார்.
பி.என்.ராவ் : நம்முடைய மண்வாசனைக்கு ஏற்ற வகையில் இல்லாமல், பிரிட்டிஷ்காரர்கள் எழுதப்படாத அரசியல் சாசனத்தின் மரபுகள், பழக்கங்கள், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளின் அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவுகளை எடுத்து நமது அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டது. இந்த தலையாய பணியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந் பி.என்.ராவ் என்பவர், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு உதவியாக இருந்து முறைப்படுத்தினார்.
அரசியலமைப்பு நிர்ணய மன்றம் : பல அறிஞர்களின் கடினமாக உழைப்பின் பயனாக, மூன்றாண்டுகளில் இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, 1949 நவம்பர் 26-ஆம் தேதி இந்தச் சட்டம் இறுதி செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்தச் சட்டத்துக்கு செயல் வடிவம் கொடுக்கும் நோக்கில் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த மன்றத்தில் ஜவாஹர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சந்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர்.
ஒடுக்கப்பட்ட வகுப்புகளை சேர்ந்த 30 -க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் அங்கு இருந்தனர். பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தை பிரதிபலித்தார். பார்சி இனத்தவர்களை எச்.பி.மோடி பிரதிபலித்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக, ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து கிறித்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர ஊமர் முகர்ஜி இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தை பிரதிபலித்தார்.